உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் ஆட்டோ டிரைவருக்கு அடி- உதை

Published On 2022-04-17 08:59 GMT   |   Update On 2022-04-17 08:59 GMT
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்தார்.
கோவை: 

மேட்டுப்பாளையம் பத்ரகாளி யம்மன் கோவில் ரோடு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 40). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று அன்னூர் ரோட்டில் தனது ஆட்டே £வில் பயணிகளை ஏற்றுவ தற்காக காத்திரு ந்தார்.
 
அப்போது அங்கு வந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் திருப்பதியிடம் எதற்காக எங்கள் பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு இருக்கிறாய் என கேட்டார். 

இதனால் அவர்களு க்கிடையே தக ராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் திருப்பதியை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.
 
இதில் திருப்பதி பலத்த காயமடைந்து சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். 

பின்னர் இதுகுறித்து திருப்பதி மேட்டுப்பாளையம் போலீசில்  புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (25) என்பவ ரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்தனர்.
 
மதுக்கரை குரும்பபாளையம்ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (48). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்தார். அவர் வேலை செய்தது அந்த வீட்டின் உரிமையாளருக்கு திருப்தியில்லை என தெரிகிறது. 

இதனை அந்த வீட்டு உரிமையாளர் மதுக்கடை காந்தி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (39) என்பவரிடம் தெரிவித்தார். அவர் சின்னசாமியை அழைத்து நீ வீட்டில் சரியாக வேலை செய்யவில்லை என கேலி கிண்டல் செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி மரக்கட்டையால் தாக்கினார்.  இதில் பலத்த காயமடைந்த சுசின்னசாமி இதுகுறித்து மதுகரை போலீசில் புகார்அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News