செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி:
தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த 2 அணைகளில் இருந்தும் அதிகளவு தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து18 ஆயிரம் கனஅடியாக இருந்து வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 71.87 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் நேற்று சற்று உயர்ந்து 72.61 அடியானது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த 2 அணைகளில் இருந்தும் அதிகளவு தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து18 ஆயிரம் கனஅடியாக இருந்து வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 71.87 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் நேற்று சற்று உயர்ந்து 72.61 அடியானது.