செய்திகள்
கூட்டுறவு வார விழாவில் ரூ.1½ கோடி கடன் உதவி - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
நாகையில் நடந்த கூட்டுறவு வார விழாவில் ரூ.1½ கோடி கடன் உதவியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கி னார். எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் டாம்கோ குழுக்களுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரம் கடன் உதவி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆண்டுதோறும் நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. நாகை மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயிர் கடன், நகை கடன், கூட்டு பொறுப்பு குழு கடன், சுய உதவிக்குழு கடன், வீட்டு வசதி கடன்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
2019-20-ம் ஆண்டிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.206 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 25 ஆயிரத்து 371 விவசாயிகளுக்கு ரூ.133 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டில் இதுவரை பயிர்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 79 ஆயிரத்து 237 விவசாயிகளுக்கு ரூ.193 கோடியே 34 லட்சம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 3 அம்மா மருந்தகங்களில் 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சலுகை விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து மாவட்ட அளவில் சிறந்த 26 கூட்டுறவு சங்கங்களுக்கு நினைவு பரிசுகளையும், பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற 36 மாணவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் அமைச்சர் முன்னிலையில், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவனிடம் சட்டப்பூர்வ நிதி ரூ.36 லட்சத்து 69 ஆயிரத்து 380-க்கான காசோலையை வழங்கினார்.
விழாவில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடுக்காட்டுராஜா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுமதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பன்னீர்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், துணைப்பதிவாளர்கள் ஜெகன்மோகன், கனகசபாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்
நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கி னார். எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் டாம்கோ குழுக்களுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரம் கடன் உதவி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆண்டுதோறும் நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. நாகை மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயிர் கடன், நகை கடன், கூட்டு பொறுப்பு குழு கடன், சுய உதவிக்குழு கடன், வீட்டு வசதி கடன்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
2019-20-ம் ஆண்டிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.206 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 25 ஆயிரத்து 371 விவசாயிகளுக்கு ரூ.133 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டில் இதுவரை பயிர்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 79 ஆயிரத்து 237 விவசாயிகளுக்கு ரூ.193 கோடியே 34 லட்சம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 3 அம்மா மருந்தகங்களில் 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சலுகை விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து மாவட்ட அளவில் சிறந்த 26 கூட்டுறவு சங்கங்களுக்கு நினைவு பரிசுகளையும், பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற 36 மாணவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் அமைச்சர் முன்னிலையில், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவனிடம் சட்டப்பூர்வ நிதி ரூ.36 லட்சத்து 69 ஆயிரத்து 380-க்கான காசோலையை வழங்கினார்.
விழாவில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடுக்காட்டுராஜா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுமதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பன்னீர்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், துணைப்பதிவாளர்கள் ஜெகன்மோகன், கனகசபாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்