ஆன்மிகம்
நிகழ்ச்சியையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகத்தீஸ்வரரை படத்தில் காணலாம்.

மேட்டுப்பாளையத்தில் மாதேஸ்வரர் கோவிலில் குரு பூஜை

Published On 2021-01-04 04:48 GMT   |   Update On 2021-01-04 04:48 GMT
மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் மாதேஸ்வரர் கோவிலில் அகத்திய அன்பர்கள் குழு சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் மாதேஸ்வரர் கோவிலில் அகத்திய அன்பர்கள் குழு சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி காலை 8 மணிக்கு குருநாதர் அகத்திய பெருமானுக்கு சித்தர் முறை யாகம், வாசனைத்திரவியங்கள், பலவண்ண மலர்கள், பழங்கள், மூலிகைகள், புனித கலசநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், மகாதீபாராதனை நடைபெற்றன. 

இதில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News