செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினத்தின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 16,221 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 937 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 2 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாவட்ட சுகாதார துறையினர் 9 பேர் கொண்ட பட்டியலை மட்டுமே வெளியிட்ட நிலையில் மாநில சுகாதார துறையினர் இந்த மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தாலும், மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது என மாநில சுகாதார துறையினர் அறிவுறுத்திய நிலையிலும், மருத்துவ பரிசோதனை வெகுவாக குறைந்துள்ள நிலையிலும், மருத்துவ பரிசோதனை முடிவுகள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
மொத்தத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார துறையினர் போதிய அக்கறை காட்டாத நிலை நீடிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினத்தின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 16,221 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 937 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 2 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாவட்ட சுகாதார துறையினர் 9 பேர் கொண்ட பட்டியலை மட்டுமே வெளியிட்ட நிலையில் மாநில சுகாதார துறையினர் இந்த மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தாலும், மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது என மாநில சுகாதார துறையினர் அறிவுறுத்திய நிலையிலும், மருத்துவ பரிசோதனை வெகுவாக குறைந்துள்ள நிலையிலும், மருத்துவ பரிசோதனை முடிவுகள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
மொத்தத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார துறையினர் போதிய அக்கறை காட்டாத நிலை நீடிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.