செய்திகள்
சங்கராபுரம் அருகே பஸ் மோதி ஆசிரியர் பலி
சங்கராபுரம் அருகே பஸ் மோதி ஆசிரியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் ராமானுஜம் (வயது 36). சங்கராபுரம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சேமபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமானுஜம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான ராமானுஜத்துக்கு நிர்மலா(34) என்ற மனைவியும், வைபவ்(4) என்ற மகனும் உள்ளனர்.