வழிபாடு
திருப்பதி

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்குவது குறித்து ஆலோசனை

Published On 2022-02-12 07:29 GMT   |   Update On 2022-02-12 07:29 GMT
திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக ஆன்லைனில் தொடர்ந்து இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டில் தினமும் 10,000 பக்தர்களும், இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட டிக்கெட்டுகள் மூலம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் கடந்த மாதம் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டது. இதில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 15-ந்தேதி வரை மட்டுமே ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

வரும் 16-ந்தேதி முதல் திருப்பதியில் அலிபிரி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸ் இப்படம் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுமென தேவஸ்தானம் அறிவித்தது.

இந்த நிலையில் ஆன்லைனில் தொடர்ந்து இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வரும் 17-ந்தேதி திருமலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மீண்டும் ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதில் இலவச தரிசனத்திற்கு பக்தர்களை எப்படி அனுமதிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 30,609 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14,359 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Tags:    

Similar News