செய்திகள்
ஜிகே வாசன், சத்குரு

கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை -ஜி.கே.வாசன் அறிவிப்புக்கு சத்குரு வாழ்த்து

Published On 2021-03-19 13:33 GMT   |   Update On 2021-03-19 13:33 GMT
அழிந்து வரும் தமிழக கோவில்களை பாதுகாக்க அதனை அரசு பிடியில் இருந்து விடுவித்து பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சத்குரு வலியுறுத்தி வருகிறார்.
கோவை:

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 19) வெளியிட்டது. அந்த அறிக்கையில் “தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை பாதுகாக்க, அதனை பக்தர்களிடமே ஒப்படைத்து, நிர்வாகம் செய்ய நடவடிக்கை எடுப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவிற்கு சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வாழ்த்துகள் திரு. ஜி.கே. வாசன் அவர்களே. பக்திசார்ந்த கலாச்சார வாழ்வு வாழும் தமிழ் மக்களிடம் கோவில்களை ஒப்படைப்பேன் என்று தங்களது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளீர்கள். கோவில் மாநிலமான தமிழ்நாட்டின் பெருமையை நாம் மீட்டெடுப்போம். ஆசிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அழிந்து வரும் தமிழக கோவில்களை பாதுகாக்க அதனை அரசு பிடியில் இருந்து விடுவித்து பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் #கோவில்அடிமைநிறுத்து என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல்வேறு தகவல்களை தினமும் பதிவிட்டு வருகிறார்.
Tags:    

Similar News