செய்திகள்
சிவகாசியில் மது விற்ற 13 பேர் கைது
சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி:
சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக தவசியப்பன், சந்தோஷ்குமார், சந்திரன், ராஜா, மனோகரன், பொன்ராஜ், மாரிச்செல்வம், பாண்டி, அன்னக்கொடி, மாரீஸ்வரன், மணிகண்டன், ஈஸ்வரன், ராஜா ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.