செய்திகள்
கொரோனா தொற்று- அமீரகத்தில், 15,721 பேர் சிகிச்சை பெறுகின்றனர்
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 42 ஆயிரத்து 159 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2,959 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி:
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 42 ஆயிரத்து 159 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 959 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து 236 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 901 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 14 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,310 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 15 ஆயிரத்து 721 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 42 ஆயிரத்து 159 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 959 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து 236 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 901 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 14 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,310 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 15 ஆயிரத்து 721 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.