செய்திகள்
கோப்பு படம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா

Published On 2021-05-01 12:02 GMT   |   Update On 2021-05-01 12:02 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக கொரோனா தொற்று 200 பேரை தாண்டி உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 169 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

ஜோலார்பேட்டையில் ரெயில்வே பணிமனையில் பணியாற்றி வரும் 4 ஊழியர்களுக்கும், ரெயில்வே போலீஸ்காரருக்கும் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் ஜோலார்பேட்டை வட்டார அளவில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் முதன்முறையாக கொரோனா தொற்று 200 பேரை தாண்டி உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Tags:    

Similar News