செய்திகள்
பத்ம விருது பரிந்துரை குறித்து நாராயணசாமி ஆலோசனை
புதுவை சட்டசபையில் பத்ம விருதுகள் பரிந்துரை குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:
மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்றவர்களிடம் இருந்து பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதுவை மாநில அரசின் சார்பில் விருதுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதற்கான உயர்நிலைக்குழு ஆலோசனை கூட்டம் சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.
இதில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விருதுக்கு பெறப்பட்ட தகுதியானவர்கள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்றவர்களிடம் இருந்து பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதுவை மாநில அரசின் சார்பில் விருதுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதற்கான உயர்நிலைக்குழு ஆலோசனை கூட்டம் சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.
இதில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விருதுக்கு பெறப்பட்ட தகுதியானவர்கள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.