செய்திகள்
இமாச்சலப்பிரதேசம், மணிப்பூரில் இன்று நிலநடுக்கம்
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பிற்பகல் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி:
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பிற்பகல் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் காஷ்மீர் எல்லையை ஒட்டியுள்ள சம்பா பகுதியில் இன்று பிற்பகல் 12.10 மணியளவில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து, 12.57 மணியளவில்
மீண்டும் ஒருமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 2.7 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இந்த இரு நிலநடுக்கங்களும் பூமியின் அடியில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக இந்திய புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், இன்று பிற்பகல் 2.35 மணியளவில் மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பிற்பகல் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் காஷ்மீர் எல்லையை ஒட்டியுள்ள சம்பா பகுதியில் இன்று பிற்பகல் 12.10 மணியளவில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து, 12.57 மணியளவில்
மீண்டும் ஒருமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 2.7 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இந்த இரு நிலநடுக்கங்களும் பூமியின் அடியில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக இந்திய புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், இன்று பிற்பகல் 2.35 மணியளவில் மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.