ஆன்மிகம்
நாகை புதிய ஒளி மாரியம்மன் கோவிலுக்கு 1,008 பால்குட ஊர்வலம்
நாகை நம்பியார்நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் 1,008 பால்குட திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
நாகை நம்பியார்நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பால்குட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வங்கக்கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டியும் நேற்று 1,008 பால்குட திருவிழா நடைபெற்றது.
புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.