செய்திகள்
மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Published On 2020-11-11 02:22 GMT   |   Update On 2020-11-11 02:22 GMT
மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்களை பதிவு செய்து முறையாக அனுப்புவதற்கு நாளை கடைசி நாள் ஆகும்.
சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். அந்த வகையில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24 ஆயிரத்து 420 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 742 பேரும் விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 17 ஆயிரத்து 816 மாணவ-மாணவிகளும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9 ஆயிரத்து 86 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 38 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பியிருப்பதாக மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

விண்ணப்பங்களை பதிவு செய்து முறையாக அனுப்புவதற்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். அதனைத் தொடர்ந்து மருத்துவக்கல்வி படிப்புக்கான தரவரிசை பட்டியல் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. இதற்கிடையில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News