செய்திகள்
புதுவையில் நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியது - 8 மீனவர்கள் உயிர் தப்பினர்
புதுவையில் நடுக்கடலில் விசைப்படகு மூழ்கிய விபத்தில் 8 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மூழ்கிய படகை மீட்க கடலோர காவல் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 34), அசோக் (25), சாமிநாதன் (26), பிரசாந்த் (27), பாஸ்கர் (30), முத்துக்குமரன் (32), முனியாண்டி (39), கந்தவேல் (42) ஆகிய 8 மீனவர்கள் கடலுக்கு நேற்று முன்தினம் இரவு மீன் பிடிக்க சென்றனர்.
நேற்று அதிகாலை மீனவர்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது படகில் என்ஜின் பகுதியில் ஓட்டை ஏற்பட்டு கடல்நீர் உட்புகுந்தது.
ஓட்டையை அடைக்க மீனவர்கள் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. சிறுக, சிறுக படகு கடலில் மூழ்க தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்திய கடலோர காவல் படை மற்றும் புதுவை கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்தனர். அதற்குள் மீனவர்களின் உறவினர்கள் தனியார் மீட்பு படகை வாடகைக்கு எடுத்துக்கொண்டு விரைந்து சென்றனர்.
பின்னர் மூழ்கிய படகில் இருந்து 8 மீனவர்களையும் மீட்டனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அதற்குள் விசைப்படகு முற்றிலும் கடலில் மூழ்கி போனது. மூழ்கிய படகை மீட்க கடலோர காவல் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுவை வீராம்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 34), அசோக் (25), சாமிநாதன் (26), பிரசாந்த் (27), பாஸ்கர் (30), முத்துக்குமரன் (32), முனியாண்டி (39), கந்தவேல் (42) ஆகிய 8 மீனவர்கள் கடலுக்கு நேற்று முன்தினம் இரவு மீன் பிடிக்க சென்றனர்.
நேற்று அதிகாலை மீனவர்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது படகில் என்ஜின் பகுதியில் ஓட்டை ஏற்பட்டு கடல்நீர் உட்புகுந்தது.
ஓட்டையை அடைக்க மீனவர்கள் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. சிறுக, சிறுக படகு கடலில் மூழ்க தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்திய கடலோர காவல் படை மற்றும் புதுவை கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்தனர். அதற்குள் மீனவர்களின் உறவினர்கள் தனியார் மீட்பு படகை வாடகைக்கு எடுத்துக்கொண்டு விரைந்து சென்றனர்.
பின்னர் மூழ்கிய படகில் இருந்து 8 மீனவர்களையும் மீட்டனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அதற்குள் விசைப்படகு முற்றிலும் கடலில் மூழ்கி போனது. மூழ்கிய படகை மீட்க கடலோர காவல் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.