செய்திகள்
ஜம்மு காஷ்மீர் - சோபோரில் பாதுகாப்புப் படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர்:
ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.