செய்திகள்
சார்ஜாவில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் ரூ.2.9 கோடி தங்கம் கடத்தல்- 5 பேர் கைது
சார்ஜாவில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் ரூ.2.9 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தியது தொடர்பாக 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
சார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி கொண்டு வரப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து வந்த 5 பயணிகள் தங்களது பைக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கேரள மாநிலம் நாதாபுரத்தை சேர்ந்த முஸ்தபா (வயது45) என்பவர் 1.67 கிலோவும், கோழிக்கோட்டை சேர்ந்த திலுலால்(33) என்பவர் 799 கிராமும், மிஜால்(25) என்பவர் 1.56 கிலோவும், காசர்கோட்டை சேர்ந்த நிஷாத்(33) என்பவர் 775 கிராமும், மலப்புரத்தை சேர்ந்த ரியாஷ்(32) என்பவர் 1.69 கிலோவும் தங்கத்தை கடத்தி கொண்டு வந்தனர்.
அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து மொத்தம் 4.377 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.2.9 கோடி ஆகும். கைதானவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி கொண்டு வரப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து வந்த 5 பயணிகள் தங்களது பைக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கேரள மாநிலம் நாதாபுரத்தை சேர்ந்த முஸ்தபா (வயது45) என்பவர் 1.67 கிலோவும், கோழிக்கோட்டை சேர்ந்த திலுலால்(33) என்பவர் 799 கிராமும், மிஜால்(25) என்பவர் 1.56 கிலோவும், காசர்கோட்டை சேர்ந்த நிஷாத்(33) என்பவர் 775 கிராமும், மலப்புரத்தை சேர்ந்த ரியாஷ்(32) என்பவர் 1.69 கிலோவும் தங்கத்தை கடத்தி கொண்டு வந்தனர்.
அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து மொத்தம் 4.377 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.2.9 கோடி ஆகும். கைதானவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.