உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

போதை பொருட்கள் விற்ற வடமாநில வாலிபர் கைது

Published On 2022-01-12 08:58 GMT   |   Update On 2022-01-12 08:58 GMT
மளிகைக் கடையில் சோதனையிட்டபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட 20 கிலோ பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர் .

அப்போது நொச்சிபாளையம் - மீனாம்பாறை சாலையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சோதனையிட்டபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட 20 கிலோ பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து மளிகை கடை நடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அராத் மாலிக் (வயது 32) என்பவரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News