செய்திகள்
மின்தடை

புதுக்குறிச்சி பகுதியில் நாளை மின்தடை

Published On 2020-02-12 17:13 GMT   |   Update On 2020-02-12 17:13 GMT
புதுக்குறிச்சி பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9.45 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (13ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ். குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி,

தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News