லைஃப்ஸ்டைல்
இனிப்பு பூந்தி

நவராத்திரி பலகாரம்: இனிப்பு பூந்தி

Published On 2020-10-21 09:30 GMT   |   Update On 2020-10-21 09:30 GMT
நவராத்திரி ஒவ்வொரு நாளும் வீட்டில் வைத்திருக்கும் கொலுவை பார்க்க வரும் உங்கள் சுற்றத்தாருக்கு பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் உணவுகளை வழங்குவீர்கள். இன்று இனிப்பு பூந்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்,
சர்க்கரை - 3/4 கப்,
தண்ணீர் - கால் கப்,
எண்ணெய் - பொரிக்க,
 உலர்ந்த திராட்சை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி- தேவையான அளவு.

செய்முறை :

முதலில் கடலை மாவை சிறிது ஆப்ப சோடா கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

நிறம் வர சிறிது வண்ண எசன்ஸ் கலந்து கொள்ளவும். வண்ணம் தேவையில்லையெனில் அது வெள்ளை கலர் பூந்தியாகவும் செய்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு திராட்சை, முந்திரி, ஏலக்காய் போன்றவைகளை பொரித்து வைத்து கொள்ளவும்.

வேறு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கரைத்த கடலை மாவை ஜல்லி கரண்டியில் விட்டு முத்து முத்தாய் பொரித்து எடுத்து கொள்ளவும்.

அதன் பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து சர்க்கரை பாகு தயார் செய்யவும். அதாவது கம்பி பதத்தில் சர்க்கரை பாகு வரவேண்டும்.

இதில் பொரித்த பூந்திகளை போட்டு கிளறி உதிரியாக செய்து அதனுடன் பொரித்த முந்திரி, திராட்சைகளை கலந்து பரிமாறவும்.

சூப்பரான இனிப்பு பூந்தி ரெடி.
Tags:    

Similar News