செய்திகள்
செயற்கைக்கோள்

கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா

Published On 2020-09-16 01:05 GMT   |   Update On 2020-09-16 01:05 GMT
சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலமாக 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பீஜிங்:

சீனாவின் ஜிலின் மாகாணம் சாங்சுன் நகரில் மஞ்சள் கடல் பகுதியில் சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தை அமைத்துள்ளது. நேற்று இந்த ஏவுதளத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து ராக்கெட் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த ராக்கெட்டில் 9 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

லாங் மார்ச் 11 கேரியர் ராக்கெட், 3 வீடியோ செயற்கைக்கோள்கள், 6 புஷ்புரூம் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. தலா 42 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள்கள் வேளாண்மை, வனவியல் நில வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொலைநிலை உணர்திறன் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா விண்ணுக்கு அனுப்பிய செயற்கைகோள் ஒன்று சுற்றுவட்ட பாதையில் நுழையாமல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News