செய்திகள்
கைது

ஒரத்தநாடு அருகே காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது

Published On 2021-07-21 11:34 GMT   |   Update On 2021-07-21 11:34 GMT
ஒரத்தநாடு அருகே காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள வட்டக்கோட்டை நெய்வேலி காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக ஒரத்தநாடு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் 4 மாட்டு வண்டி, ஒரு ஆட்டோவில் சிலர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதையடுத்து மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டிகள், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நெய்வேலியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது43), கங்காதாஸ் (42), சிவநேசன் (20), மணிகண்டன் (22), ராஜ்கிரண் (18) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News