செய்திகள்
சென்னை மழை

நிவர் புயல்: 1516 முகாம்களில் 1.33 லட்சம் பேர் தங்கவைப்பு

Published On 2020-11-25 16:11 GMT   |   Update On 2020-11-25 16:11 GMT
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1516 முகாம்களில் 1.33 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடக்க இருக்கிறது. நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாமில் தங்கவைப்பட்டுள்ளனர். சுமார் 1516 முகாம்களில் 1.33 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப்படை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News