உள்ளூர் செய்திகள்
ஒன்றியக்குழு கூட்டத்தில் யூனியன் சேர்மன் செந்தமிழ்ச்செல்வி பேசியபோது எடுத்தபடம்.

அரியலூர் ஒன்றியக்குழு கூட்டம்

Published On 2022-05-07 08:57 GMT   |   Update On 2022-05-07 08:57 GMT
அரியலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் அலுவலக செலவை குறைத்து வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
அரியலூர்:


அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஒன்றியக்குழு கூட்டம் யூனியன் சேர்மன் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவர் சரஸ்வதி ஜெயவேல் முன்னிலையில், யூனியன் கமிஷ்னர் குணசேகரன் வரவேற்று பேசினார்.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பொய்யாத நல்லூர் வெள்ளைச்சாமி, ராயபுரம் முத்துசாமி, ஓட்ட கோவில் பாப்பா, எருத்துக்காரன்பட்டி சரவணன், கடுகூர் முருகேசன், ராவுத்தன்பட்டி ராணி, பள்ளகிருஷ்ணாபுரம் செந்தமிழ்ச்செல்வி,

அஸ்தினாபுரம் கண்ணகி, மண்ணுழி சுந்தரவடிவேல், விளாங்குடி ரேவதி, பெரிய திருகோணம் மாலா, வைப்பம் சிவபெருமாள், பொய்யூர் ராதாகிருஷ்ணவேணி,

ஆலந்துறையார் கட்டளை விஜயகுமார், புங்கங்குழி சுரேஷ்குமார், உட்பட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அலுவலகத்திற்கு ஜீப்புக்கு டீசல் போட்டது ரூ.20 ஆயிரம், கிராம பகுதிகளில் கொரோனா, டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.2 லட்சம், அலுவலக வாகன பராமரிப்பு ரூ.50 ஆயிரம், பிப்ரவரி மாதம் அலுவலக செலவினம் தபால் டைப் செய்த வகையில் ரூ.35 ஆயிரம், மார்ச் மாதம் செலவினம் ரூ.30 ஆயிரம், அலுவலக மின் கட்டணம் ரூ.1500,

அலுவலகம் சுத்தம் செய்த வகையில் செலவினம் ரூ.75 ஆயிரம், கல்லங்குறிச்சி கோவில் திருவிழாவில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள ரூ.5 லட்சம், இதுபோன்ற மாதாமாதம் செலவினங்கள் மேற்கொள்கிறார்கள்.

ஆனால் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லை, கழிப்பிட வசதி இல்லை, கிராம பகுதியில் தார்சாலை கண்ணால் பார்க்க முடியவில்லை, அலுவலக செலவுகளை குறைத்துக் கொண்டு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வரும் காலங்களில் செலவினங்களை குறைத்து ஒன்றிய பகுதிகளில் ஒரு கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக யூனியன் சேர்மன் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். கூட்ட முடிவில் அலுவலக மேலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News