செய்திகள்
திட்டக்குடி அருகே வேன் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
திட்டக்குடி அருகே தனியார் வேன் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சின்னமுத்து (வயது 27). இவர் நேற்று முன்தினம் அதே கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு குடிபோதையில் சென்றார். பின்னர் அவர் திடீரென அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் வந்த தனியார் வேனின் முன்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.