உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- நிலத்தரகர் பலி
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நிலத்தரகர் பலியானார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள வாகைகுளம் நேரு நகரை சேர்ந்தவர் டேவிட்(வயது 55). நிலத்தரகர். நேற்று மானூரில் இருந்து எட்டான்குளம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் டேவிட்டின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த டேவிட் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள வாகைகுளம் நேரு நகரை சேர்ந்தவர் டேவிட்(வயது 55). நிலத்தரகர். நேற்று மானூரில் இருந்து எட்டான்குளம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் டேவிட்டின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த டேவிட் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.