செய்திகள்
விஷம்

சென்னிமலையில் காண்டிராக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-08-22 11:07 GMT   |   Update On 2019-08-22 11:07 GMT
சென்னிமலையில் பல லட்ச ரூபாய் கடனை திரும்ப செலுத்த முடியாத மனவேதனையில் காண்டிராக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

சென்னிமலை காட்டூர் ரோட்டை சேர்ந்த தாமோதரன் மகன் பாஸ்கரன் (வயது 38). இவர் கட்டிட ஒப்பந்ததாரர். இவரது தொழில் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தது.

இதனால் அவருக்கு பல லட்ச ரூபாய் கடன் இருந்தது. இந்த கடனை திரும்ப செலுத்த முடியாத மனவேதனையில் இருந்த பாஸ்கரன் சம்பவத்தன்று வீட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது மனைவி கவிதா (வயது 35),அவரை மீட்டு சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் பாஸ்கரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News