லைஃப்ஸ்டைல்
நம்மை சீராட்டி, பாலூட்டி, கல்வி கற்க வைத்து, வேலை வாய்ப்பு மற்றும் மண வாழ்க்கையும் ஏற்படுத்தி கொடுத்த பெற்றோரை இன்றைக்கு எத்தனை பேர் மதிக்கிறார்கள்.
வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகில் பெற்றோர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக இருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை சிறுவயது முதல் பெரியவனாகும் வரை தங்களது அரவணைப்பில் வளர்த்து ஆளாக்குகிறார்கள். அதாவது பிறந்ததில் இருந்து மூன்று வயது வரை அக்குழந்தைகளுக்கு பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
அதற்கு பிறகு பள்ளிக்கூடங்களில் சேர்த்து கல்வி அறிவையும், மற்றவற்றை பற்றியும் அறிய வழி செய்கின்றனர். பள்ளிப் படிப்புடன் அவர்களுக்கு பாட்டு, நடனம், விளையாட்டு, கணிப்பொறி கல்வி போன்றவற்றையும் பகுதி நேரமாக கற்கவும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கல்லூரிகளில் சேர்த்து மேல் கல்வி பயிலவும் போராடுகின்றனர்.
கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவர்களின் தகுதிக்கேற்ப ஒரு நல்ல வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பிறகு, நல்ல இல் வாழ்க்கையும் அமைத்து கொடுக்கின்றனர். இது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்றாலும், அவ்வாறான பெற்றோருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா?. நம்மை சீராட்டி, பாலூட்டி, கல்வி கற்க வைத்து, வேலை வாய்ப்பு மற்றும் மண வாழ்க்கையும் ஏற்படுத்தி கொடுத்த பெற்றோரை இன்றைக்கு எத்தனை பேர் மதிக்கிறார்கள்.
அவர்களின் தியாகத்தை போற்றுகிறார்கள். பலபேர் பெற்றோர் செய்த அனைத்தையும் மறந்து விட்டு, அவர்களை நிர்கதியாக விட்டு விடுகிறார்கள். பல பெற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்கள். ஆகவே, நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை நாம் மதிக்க வேண்டும். தாயும்-தந்தையும் நம் இரு கண்களை போன்றவர்கள். அவர்களது உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவர்களது ஆயுட்காலம் வரை நம்மோடு வைத்துக் கொண்டு அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
அதற்கு பிறகு பள்ளிக்கூடங்களில் சேர்த்து கல்வி அறிவையும், மற்றவற்றை பற்றியும் அறிய வழி செய்கின்றனர். பள்ளிப் படிப்புடன் அவர்களுக்கு பாட்டு, நடனம், விளையாட்டு, கணிப்பொறி கல்வி போன்றவற்றையும் பகுதி நேரமாக கற்கவும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கல்லூரிகளில் சேர்த்து மேல் கல்வி பயிலவும் போராடுகின்றனர்.
கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவர்களின் தகுதிக்கேற்ப ஒரு நல்ல வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பிறகு, நல்ல இல் வாழ்க்கையும் அமைத்து கொடுக்கின்றனர். இது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்றாலும், அவ்வாறான பெற்றோருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா?. நம்மை சீராட்டி, பாலூட்டி, கல்வி கற்க வைத்து, வேலை வாய்ப்பு மற்றும் மண வாழ்க்கையும் ஏற்படுத்தி கொடுத்த பெற்றோரை இன்றைக்கு எத்தனை பேர் மதிக்கிறார்கள்.
அவர்களின் தியாகத்தை போற்றுகிறார்கள். பலபேர் பெற்றோர் செய்த அனைத்தையும் மறந்து விட்டு, அவர்களை நிர்கதியாக விட்டு விடுகிறார்கள். பல பெற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்கள். ஆகவே, நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை நாம் மதிக்க வேண்டும். தாயும்-தந்தையும் நம் இரு கண்களை போன்றவர்கள். அவர்களது உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவர்களது ஆயுட்காலம் வரை நம்மோடு வைத்துக் கொண்டு அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.