செய்திகள்
கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

கடலாடி அருகே கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-13 10:31 GMT   |   Update On 2021-10-13 10:31 GMT
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உப்பளம் அமைப்பதை தடுக்க கோரியும், ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக புறநகர் பணிமனை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா டி.மாரியூர் ஊராட்சியில் மடத்தாகுளம் பொது கண்மாய் உள்ளது.

இங்கு ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை அகற்றக்கோரியும், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உப்பளம் அமைப்பதை தடுக்க கோரியும், ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக புறநகர் பணிமனை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட பொறுப்பு செயலாளர் விடுதலை சேகர் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலாளர் கனியமுதன் பேசினார்.

பாராளுமன்ற செயலாளர் கோவிந்தராஜ், தொகுதி செயலாளர் பழனிக்குமார், கிட்டு, சத்தியராஜ் உள்பட பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News