ஆன்மிகம்
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மலை மாதேஸ்வரா கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
மலை மாதேஸ்வரா கோவிலில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் பக்தர்களை தவிர பிற மாநில பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மாதேஸ்வரன் மலையில் மலை மாதேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியை சேர்ந்த பக்தர்களும் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் பக்தர்களை தவிர பிற மாநில பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.
இந்தநிலையில் கோவில் நிர்வாகம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதித்துள்ளது. மற்ற நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.
இந்தநிலையில் கோவில் நிர்வாகம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதித்துள்ளது. மற்ற நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.