செய்திகள்
கைது

விருதுநகர் அருகே 35 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது

Published On 2020-11-21 12:10 GMT   |   Update On 2020-11-21 12:10 GMT
விருதுநகர் அருகே 35 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள குமாரபுரத்தில் பாண்டியன்நகர் போலீசார் ரோந்து சென்ற போது அல்லம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 34), என்பவர் 35 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரமேசை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.52 ஆயிரத்து 300 ஆகும்.
Tags:    

Similar News