செய்திகள்
உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே 24-ம் தேதி அயோத்திக்கு பயணம்

Published On 2019-11-09 14:17 GMT   |   Update On 2019-11-09 14:17 GMT
அயோத்தி நகருக்கு வரும் 24-ம் தேதி செல்ல உள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை:

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில், அயோத்தி நகருக்கு வரும் 24-ம் தேதி செல்ல உள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தி வழக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியாயமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி.

இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள் இன்று. நான் வரும் 24-ம் தேதி அயோத்திக்குச் செல்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் சிவசேனா எப்போதுமே தீவிரம் காட்டியிருக்கிறது. பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும். அவர்தான் ராமர் கோவிலுக்காக ரத யாத்திரை நடத்தினார். அவரிடம் ஆசியும் பெற வேண்டும் என தெரிவித்தார். 
Tags:    

Similar News