ஆன்மிகம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

Published On 2021-11-03 05:42 GMT   |   Update On 2021-11-03 05:42 GMT
ஐப்பசி திருவிழாவின் போது நடைபெறும் பூஜைகள், கதகளி நிகழ்ச்சியும் இந்த ஆண்டும் வழக்கம்போல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா நேற்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறப்பு, விசேஷ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளம், நாதஸ்வரம் முழங்க காலை 8.59 மணிக்கு தந்திரி சஜித் சங்கர நாராயணரு, கருடன் இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை கொடிமரத்தில் ஏற்றினார். தொடர்ந்து கொடிமரபூஜைகள் நடைபெற்றது.

6-ந் தேதி கிருஷ்ணன் கோவிலில் கொடியேற்று நிகழ்ச்சியும், 10-ந் தேதி வேட்டை சிவன் கோவிலுக்கு சுவாமி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 11-ந் தேதி சுவாமி தளியல் ஆற்றுக்கு ஆராட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஐப்பசி திருவிழாவின் போது நடைபெறும் பூஜைகள், கதகளி நிகழ்ச்சியும் இந்த ஆண்டும் வழக்கம்போல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கொடியேற்று விழா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News