ஆன்மிகம்

தேய்பிறை அஷ்டமியையொட்டி ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2019-06-26 04:23 GMT   |   Update On 2019-06-26 04:23 GMT
ஸ்ரீ ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம்,விபூதி உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பட்டிவீரன்பட்டியில் சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம்,விபூதி உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்பு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆகர்ஷண பைரவரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடந்தன. பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டி தீபம் ஏற்றி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் சாவடிபஜாரில் உள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Tags:    

Similar News