செய்திகள்
பிரதமர் மோடி

5 மாநிலங்களில் வாக்குப்பதிவு- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Published On 2021-04-06 03:25 GMT   |   Update On 2021-04-06 03:25 GMT
தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் பொதுமக்கள் அதிக அளவில் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதேபோல் அசாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் 3ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்துவருகின்றனர்.

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் பொதுமக்கள் அதிக அளவில் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் அதிக அளவில் வாக்குகளை செலுத்த வேண்டும். குறிப்பாக, இளம் வாக்காளர்கள் தவறாமல் ஓட்டு போட வேண்டும்’ என கூறி உள்ளார்.
Tags:    

Similar News