செய்திகள்
தற்கொலை

இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை

Published On 2021-07-01 10:36 GMT   |   Update On 2021-07-01 10:36 GMT
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை கணபதி அருகே உள்ள மாமரதோட்டத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் பவித்ரன் (வயது 26). பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டு இருந்தார்.

இந்தநிலையில் பவித்ரனுக்கு கடந்த 1 வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் ஒருவரை ஒருவர் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

பவித்ரன் இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை அந்த இளம்பெண்ணிடம் மறைமுகமாக கூறி வந்தார். சம்பவத்தன்று இளம்பெண்ணை தொடர்பு கொண்ட பவித்ரன் தன்னுடைய காதலை அவரிடம் கூறினார். அதற்கு அந்த இளம்பெண் தான் நட்பாக பழகியதாக கூறி காதலை ஏற்க மறுத்து விட்டார்.

இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததால் கடந்த சில நாட்களாக பவித்ரன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பவித்ரனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News