செய்திகள்
டி.டி.வி.தினகரன்

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் - தேர்தல் முடிவு குறித்து டி.டி.வி.தினகரன் கருத்து

Published On 2021-05-02 19:27 GMT   |   Update On 2021-05-02 19:27 GMT
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்வதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் முடிவு குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலில் களப்பணி ஆற்றிய கட்சியினருக்கும், கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News