செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி

40 நாட்களில் 1.51 லட்சம் மின்சார புகார்களுக்கு தீர்வு - அமைச்சர் செந்தில் பாலாஜி

Published On 2021-07-31 08:54 GMT   |   Update On 2021-07-31 10:03 GMT
40 நாட்களில் மின்சார வாரிய தொடர்பான புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

சென்னை:

அனைத்து மின் பகிர்மான மாவட்ட தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், வட்டார பொறியாளர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இயக்குனர் ராஜேஷ் லகானி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 40 நாட்களில் மின்சார வாரிய தொடர்பான புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள், உயர்மட்ட மின் பாதையை குறைத்து புதைவிட பாதையாக மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


கூட்டத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், தமிழகம் முழுவதும் மின்சார வாரியம் தொடர்பாக 1 லட்சத்து 60 ஆயிரம் புகார்கள் வந்தன. இதில் 1 லட்சத்து 51 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு செய்யப்பட்டுள்ளது.

மீதம் உள்ள புகார்களுக்கான தீர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றார்.

இதையும் படியுங்கள்...மாணவர்கள் நன்றாக படிக்கிறார்களா..? வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் ஆய்வு

Tags:    

Similar News