உள்ளூர் செய்திகள்
தொழில் நஷ்டத்தால் விசைத்தறி உரிமையாளர் தற்கொலை
பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று பிரகாஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்,:
பல்லடம் மாணிக்காபுரம் ரோடு வைரம் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் பிரகாஷ் குமார் (வயது 36). இவரது மனைவி ஈஸ்வரி (31). இவர்களுக்கு நித்விக் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. பிரகாஷ்குமார் விசைத்தறி நடத்தி வந்தார்.
இந்த நிலையில் விசைத்தறி தொழில் நஷ்டத்தால் கடந்த சில மாதங்களாக அவருக்கு மனநிலை பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் அருகே உள்ள விசைத்தறி கூடத்தின் பொருட்கள்வைக்கும் அறையில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.