செய்திகள்
நிலதகராறில் வாலிபர் தாக்குதல்

வேதாரண்யம் அருகே நிலதகராறில் வாலிபரை தாக்கியவர் கைது

Published On 2020-01-14 08:55 GMT   |   Update On 2020-01-14 08:55 GMT
வேதாரண்யம் அருகே நிலதகராறில் வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட தோப்புத்துறை, துள்ளுவெட்டி அய்யனார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (35). இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த கண்ணன் (40) என்பவருக்கும் நில பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கண்ணன் பிரச்சினைக்குள்ள இடத்தில் சுவர் வைக்க ஏற்பாடு செய்து வேலைகளைதொடங்கினாராம். இதைபார்த்த கிருஷ்ணமூர்த்தி என் இடத்தை ஏன் சேர்த்து சுவர் என்று தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் கிருஷ்ணமூர்த்தியை கம்பியால் தாக்கினாராம்.

இதில் காயமடைந்த கிருஷ்ண மூர்த்தி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, மேல் சிகிச்சைக்காக நாகைஅரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் வழக்கு பதிவு செய்து கண்ணணை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News