செய்திகள்
செங்கோட்டை அருகே பி.இ. பட்டதாரி வாலிபர் தற்கொலை
செங்கோட்டை அருகே பி.இ. பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது27). இவர் ‘பி.இ.’ படித்து விட்டு தகுந்த வேலை தேடி வந்தார். இவரது மனைவி சித்த மருத்துவத்தில் எம்.டி. படித்து வந்தார்.
இந்த நிலையில் சிதம்பரத்துக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு எதிலும் ஈடுபாடு கொள்ள முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மனம் உடைந்த சிதம்பரம் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது27). இவர் ‘பி.இ.’ படித்து விட்டு தகுந்த வேலை தேடி வந்தார். இவரது மனைவி சித்த மருத்துவத்தில் எம்.டி. படித்து வந்தார்.
இந்த நிலையில் சிதம்பரத்துக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு எதிலும் ஈடுபாடு கொள்ள முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மனம் உடைந்த சிதம்பரம் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.