ஆன்மிகம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில்

ஒரே கல்லில் ஆன கருட ஸ்தம்பம்

Published On 2021-03-21 02:30 GMT   |   Update On 2021-03-20 07:55 GMT
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலுக்கு எதிரே 54 அடி உயரம் கொண்ட கருட ஸ்தம்பம் உள்ளது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.இது காண்பவரின் மனதை கவரும் வண்ணம் கமபீரமாக இருக்கிறது.
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலுக்கு எதிரே 54 அடி உயரம் கொண்ட கருட ஸ்தம்பம் உள்ளது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.இது காண்பவரின் மனதை கவரும் வண்ணம் கமபீரமாக இருக்கிறது. கம்பத்தின் மேல் தளத்தில் கருடனுக்கு அழகிய கோவில் உள்ளது. ருக்மணி, சத்யபாமாவுடன் உற்சவமூர்த்தியாக காட்சி அளிக்கும் வித்யா ராஜகோபாலனுக்கு ராஜமன்னார்கோபாலன் என்ற திருப்பெயரும் உண்டு.

ஒரு காதில் குண்டலமும்,ஒரு காதில் தோடும் அணிந்து வித்யா ராஜகோபாலன் என்ற திருப்பெயரோடு ஒரு வஸ்திரத்தில் இடுப்பில் கச்சம், தலையில் சிறு முண்டாசு, வலது கரத்தில் பொன் சாட்டையுடன் மாடு கன்றுகளுடன் இடையர் உருவத்தில் நின்ற திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். இங்கு தாயாருக்கு தனிச்சன்னதி உள்ளது. தாயார் மூலவர் செண்பகலட்சுமி.

உற்சவர் செங்கமலத்தாயார். இக்கோவிலில் பெருமாள்,தாயார் சன்னதி உள்பட 24 சன்னதிகள் உள்ளன.

இந்த தகவல்களை மன்னர்குடி கணினிஆசிரியர் என்.ராஜப்பா தெரிவித்தார்.

Tags:    

Similar News