செய்திகள்
கொள்ளிடம் பகுதியில் 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி
18 வயது நிரம்பிய மற்றும் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் நேற்று ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு, மகேந்திரப்பள்ளி, திருமுல்லைவாசல் அகர எலத்தூர் ஆகிய 4 இடங்களில் வட்டார சுகாதார துறை சார்பில், வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. மருத்துவ குழுவினர்கள் மூன்று குழுக்களாக சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். 18 வயது நிரம்பிய மற்றும் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் நேற்று ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நேற்று நடந்த மூன்று முகாம்களிலும் 700 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாம்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை என வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.