செய்திகள்
கைது

ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து சங்கிலி பறிக்க முயன்றவர் கைது

Published On 2020-11-18 11:27 GMT   |   Update On 2020-11-18 11:27 GMT
ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து சங்கிலி பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி கோகிலா (வயது32). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது குழந்தைகளுடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரம் அருகே உள்ள சித்தூரை சேர்ந்த பால்சாமி மகன் ஸ்ரீதர் (29) என்பவர் வீடு புகுந்து கோகிலாவின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்த கோகிலா கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ஸ்ரீதர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர்.
Tags:    

Similar News