செய்திகள்
தாராபுரம்

தாராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு

Published On 2021-10-01 10:51 GMT   |   Update On 2021-10-01 10:51 GMT
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வருவதால்அதிகாரிகள் வெளியே சென்றதாக சிலர் கூறினர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இன்று காலை ஏராளமான பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்வதற்காக  வந்திருந்தனர்.

காலை முதல் மதியம் வரை பத்திரப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்தநிலையில் அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. நீண்டநேரமாகியும் வராததால் பொதுமக்கள்  காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதனால் பலர் அவதியடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பத்திரபதிவுக்காக காலையில் இருந்து காத்து கொண்டிருக்கிறோம். வெளியே சென்றஅதிகாரிகள் சிலர் வரவே இல்லை. இதுபற்றி கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வருவதால்அதிகாரிகள்  வெளியே சென்றதாக சிலர் கூறினர். அதற்காக எங்களை நீண்ட நேரம் காக்க வைப்பதா? என்றனர்.
Tags:    

Similar News