உள்ளூர் செய்திகள்
ஆரணி அருகே கிணற்றில் மூழ்கிய வாலிபர் பிணம் மீட்பு
ஆரணி அருகே கிணற்றில் மூழ்கிய வாலிபர் பிணம் மீட்கப்பட்ட நிலையில் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி டவுன் புதுக்காமூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 25). இவர் நண்பர்களுடன் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் நேற்று மாலை சென்றார். நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது புஷ்பராஜ் திடீரென்று தண்ணீரில் மூழ்கினார்.
இதனைக் கண்ட நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். அவர்களால் முடியாததால் உடனடியாக ஆரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
பின்னர் இன்று காலையில் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். 3 மணி நேரம் கழித்து புஷ்பராஜ் பிணத்தை மீட்டனர். ஆரணி தாலுகா போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.