செய்திகள்
தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

Published On 2021-02-20 10:03 GMT   |   Update On 2021-02-20 10:03 GMT
வேலூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூரை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மாவீரன். இவரது மனைவி பவித்ரா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் பவித்ரா மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவித்ராவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News