ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா 30-ந்தேதி தொடங்குகிறது- 4-ந்தேதி கருடசேவை

Published On 2019-09-24 06:19 GMT   |   Update On 2019-09-24 06:19 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. 4-ந்தேதி கருடசேவை நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 30-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி 29-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. 30-ந்தேதி மாலை 5.23 மணியில் இருந்து 6 மணிவரை மீன லக்னத்தில் கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

அக்டோபர் மாதம் 1-ந்தேதி காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா.

2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 4-ந்தேதி மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 12 மணிவரை கருட வாகன வீதிஉலா.

5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

வாகன வீதிஉலா தினமும் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணிவரையிலும் நடக்கிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடனும் சிறப்பு அலங்காரத்திலும், பிரத்யேக அவதாரத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
Tags:    

Similar News