செய்திகள்
ஸ்ரீநகர் அருகே பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்... சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர் பலி
ஸ்ரீநகர் அருகே பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை பாதுகாப்பு படையினர் சீல் வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
அவ்வகையில், ஸ்ரீநகர் புறநகர்ப்பகுதியான லவாய்போரா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். வீரர்கள் சுதாரிப்பதற்குள் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை பாதுகாப்பு படையினர் சீல் வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என சிஆர்பிஎப் டிஐஜி தெரிவித்துள்ளார்.